அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு.. 0% ஆகும் அகவிலைப்படி.. கணக்கீட்டில் மாற்றம்.
அதனைத்தொடர்ந்து மார்ச் மாதத்திற்கான அகவிலைப்படி மீண்டும் 4% உயர்த்தப்படும் எனக் கூறப்படும் நிலையில், அது 50% ஆக உயரும். மூன்று மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையாக மத்திய அரசு ஊழியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும். நிலுவைத் தொகையானது, அறிவிக்கப்பட்ட சதவீத உயர்வின் அடிப்படையில் செயல்படுத்தப்படும். உதாரணமாக 4 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளதால், மூன்று மாதத்திற்கு 4 சதவீதம் நிலுவைத் தொகை வழங்கப்படும்.
அகவிலைப்படி எப்படி கணக்கிடப்படுகிறது!
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 7ஆவது ஊதியக்குழுவின் கீழ், லெவல் 1 முதல் லெவல் 18 வரை வெவ்வேறு தர ஊதியமாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், அகவிலைப்படியானது தர ஊதியம் மற்றும் பயணப்படியின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. இதில் லெவல் 1 இல், குறைந்தபட்ச சம்பளம் ரூ.18,000 முதல் ரூ.56900 ஆக உள்ளது. நிலை 2 முதல் 14 வரையிலான ஊழியர்களுக்கு சம்பளம் தர ஊதியத்தின் படி மாறுபடும். நிலை 15, 17, 18க்கு தர ஊதியம் இல்லை. மாறாக, அடிப்படை சம்பளம் முறையே, ரூ.1,82,200, ரூ.2,25,000, ரூ.2,50,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment