அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்களை நிபந்தனைகளின் அடிப்படையில் பணியிலிருந்து விடுவிக்க இயக்குநர் உத்தரவு.
பதிவிறக்கம் செய்ய கீழே கொடுக்கப்பட்டுள்ள CLICK HERE என்ற சொல்லை அழுத்தவும்.Please Click the below link to Download PDF File from Our Site.
STUDY MATERIALS CLICK BELOW LINK👇👇👇தொடக்கக் கல்வி இயக்கத்தின் கீழ் உள்ள ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசுப் பள்ளி ஆசிரியர்ளுக்கு 2021-2022 -கல்வியாண்டில் தொடக்கக் கல்வி இயக்ககத்திலிருந்து பள்ளிக் கல்வித்துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் கீழ்கண்ட நிபந்தனைகளின் அடிப்படையில் பணியிலிருந்து விடுவிக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .
நிபந்தனைகள்
1. தொடக்கக் கல்வி இயக்ககத்தின் தடையின்மைச் சான்று பெற்றிருக்க வேண்டும் .
2. துறை மாறுதலில் அலகு விட்டு அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை / குற்றவியல் நடவடிக்கை ஏதும் இருத்தல் கூடாது .
3.துறை மாறுதலில் அலகு விட்டு அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை ஏதும் இருத்தல் கூடாது .
மேற்காண் நிபந்தனைகள் சரியாக உள்ள பட்சத்தில் பள்ளிக் கல்வித் துறைக்கு அலகு விட்டு அலகு மாறுதல் பெற்ற ஆசிரியர்களை பணியிலிந்து விடுவிக்க வேண்டும் . மேலே தெரிவித்துள்ள நிபந்தனைகள் பின்பற்றாமல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டால் அதன் முழுபொறுப்பும் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலரையே சாரும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.
No comments:
Post a Comment